அமெரிக்க – ப்ளோரிடா – மியாம் நகரில் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
1980 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட 12 மாடிகளைக் கொண்ட கட்டடம் உடைந்து விழக் கூடும் என கடந்த 3 வருடங்களாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
எனினும், அவ்வாறான எச்சரிக்கையை கருத்திற் கொள்ளாது செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி உடைந்து வீழ்ந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 18 பேர் பலியானதுடன் 145 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தநிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது.