சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

1626410372 4583
1626410372 4583

சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில் எப்படி வெள்ளம் புகுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் 22 மீட்பு வாகனங்கள், 5 நீரேற்றும் நிலையங்கள் ஆகியவற்றின் துணையுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப்பாதை கட்டப்பட்டு வரும் பகுதி ஒரு நீர்த்தேக்கத்துக்கு அருகே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை விசித்திரமான குரல்கள் கேட்பதாக அங்கு பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.