உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேத்தில் இன்று (19) அதிகாலை ஆக்ரா-மொராதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சண்டவுசி அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.