சீனாவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மரணித்தோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வார அறிக்கையுடன் ஒப்பிடுகையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி மரணித்தோரின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது.
ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஷோவில் 292 மரணங்கள் பதிவானதுடன் 47 பேர் காணாமல் போயுள்ளனர்.
12 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜெங்ஷோ பகுதியில் ஆண்டுதோறும் பதிவாகும் மழைவீழ்ச்சியை விடவும் அதிக மழைவீழ்ச்சி 3 நாட்களில் பதிவாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 617 தசம் ஒரு மில்லிமீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.