லெபனானில் எரிபொருள் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 20 பேர் பலியாகினர்.
அத்துடன், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
வடக்கு லெபனானின் அக்கார் பகுதியில் இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லெபனானில், பொருளாதார நெருக்கடியும், எரிபொருள் பற்றாக்குறையும் நிலவுகின்ற நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது