நியூஸிலாந்தில் 3 நாட்களுக்கு நாடுதழுவிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஒக்லண்ட் பகுதியில் புதிதாக கொவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் இவ்வாறு பொதுமுடக்கத்தை அமுல்படுத்தியுள்ளார்.
தற்போது நியூஸிலாந்தில் 4 ஆவது கொவிட் அலை பரவக்கூடிய அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்லண்ட் மற்றும் புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட கொரமண்டல் பிரதேசத்தை 7 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.