மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய சூறாவளியால் 8 பேர் பலி

AP21233598705531
AP21233598705531

கிழக்கு மெக்சிக்கோ பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 8 பேர் பலியாகினர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மழையுடன் கூடிய கடுமையான காற்றை அடுத்து பல விருட்சங்கள் வேருடன் வீழ்ந்துள்ளதுடன் பிராந்தியத்தின் மின்சார விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பல நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. தற்போது, சூறாவளியின் வேகம் குறைந்து அந்த பிராந்தியத்தை விட்டு நகர்ந்து செல்வதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.