இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு

020f5bbd curfew
020f5bbd curfew

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் இன்று முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, 4 மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள், பூங்காக்கள் இன்று முதல் மீள திறக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அத்துடன் வர்த்தக நிலையங்கள் இதுவரையில் இரவு 9 மணி வரையில் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தளர்வின் அடிப்படையில் இரவு 10 மணி வரை செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதனை எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதாக தமிழக அரசாங்கம் அறிவித்தது.