அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள வெப்ப நிலை – தவிக்கும் கங்காரு

gangaru
gangaru

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100 இற்கும் அதிகமான இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிந்துள்ளனர்.

2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளதுடன் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலா கரடிகள் தீயில் கருகி இறந்ததாக அந்த நாட்டின் நாடாளுமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இதேவேளை நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அங்கு வெயிலின் அளவு 42 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னி அருகே உள்ள மெர்ரிவா நகரில் காட்டுத்தீ மற்றும் வெயில் காரணமாக கடும் வெப்பத்தை எதிர்கொண்ட கங்காரு ஒன்று நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு வீட்டுக்கு வெளியே இருந்த நீச்சல் குளத்தில் தன் உடலை நனைத்து தன்னை குளிர்வித்துக்கொண்டது.

இந்த காட்சிகளை வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் தனது தொலைபேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.