தென் அமெரிக்க நாடான பெருவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்தனர்.
பெருவின் தலைநகரான லிமாவிற்கு 60 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலைப்பாங்கான பகுதி ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த விபத்தில் 20 பேர் வரையில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பெருவில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 3 பாரிய வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.