ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையின குழுக்கள் உள்ளிட்ட சகல மக்களினதும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பினை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாகவும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.