வடகொரியா, புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செயள்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பரிசோதனை நடவடிக்கையானது, பல்வேறு எதிர்கால விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைக் கற்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவினால், கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட ஆயுத பரிசோதனை இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.