மகாத்மா காந்தியின் பிறந்த தினம்; நரேந்திர மோடி மரியாதை

modi 720x375 1
modi 720x375 1

மாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

டெல்லி- ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை) மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதேவேளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்தி மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “பெரும்பாலான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” எனப் பதிவேற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.