இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்து 963 ஆக உயர்ந்துள்ளது.