இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 14,348 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 தொற்றால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்து 46 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 தொற்றால் அங்கு 805 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவற்றில் 708 மரணங்கள் கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457,221 ஆக அதிகரித்துள்ளது.