அவுஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ

Tamil News large 2000802 318 219
Tamil News large 2000802 318 219

அவுஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகளுக்கு இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

நியு சவுத் வேல்ஸில் மேலும் இரண்டு பேர் தீயினால் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு மாநிலங்களிலும் 4 பேர் வரையில் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.