லண்டன் – பெக்ஸ்லிஹீத் பகுதியில் தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நால்வர் பலி

4 BLP CHP aq 7318
4 BLP CHP aq 7318

லண்டனின் தென்கிழக்கில் உள்ள பெக்ஸ்லிஹீத் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட நால்வர் பலியாகினர்.

இரண்டு பெண்களும் இரண்டு சிறார்களும் இந்த அனர்த்தத்தில் பலியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் வசித்த கட்டடத்தொகுதி தீப்பரவலில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர் ஒருவர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு பணிக்காக 6 தீயணைக்கும் இயந்திரங்களுடன் 40 தீயணைப்பு வீரர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீப்பரவிய இடத்திற்கு ஏணி மூலம் சென்ற தீயணைக்கும் படையினர் குறித்த நால்வரையும் மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்கள் நால்வரும் ஏற்கனவே மரணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னரே அவர்கள் மேற்படி பிரதேசத்தில் குடியேறியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த கட்டடத்திலிருந்து வெளியேறிய ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.