திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஒரு லட்டு ரூ. 50 என்ற விலையில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யவும் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.