ஜப்பானிலுள்ள 8 மாடி கட்டடத்தில் பாரிய தீயால் 27 பேர் மரணம்!

swarajya 2019 12 7984437e d647 4d5c adc0 e33aad7f11e5 fire
swarajya 2019 12 7984437e d647 4d5c adc0 e33aad7f11e5 fire

ஜப்பானின் ஒசாக்கா மாகாணத்தின் கிஷிமோடோ நகரில் உள்ள 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அடுக்குமாடி கட்டடத்தில் மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்வேறு வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டடத்தின் 4  ஆவது தளத்தில் இன்று காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கட்டடத்தில் உள்ள வணிக வளாகங்களில் பலர் சிக்கிக்கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், சிலர் பலத்த காயங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.