மடகாஸ்கரில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி

3. The submerged ship 768x512 1
3. The submerged ship 768x512 1

மடகஸ்காரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பேருடன் பயணித்த கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கப்பலில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 68 பேர் காணமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் தற்போது மீட்கப்பட்டனர்.

மேலும், உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன் காரணமாக கவிழ்ந்து இருக்கலாம் என்றும், சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.