அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்றைய தினம் 2 ஆயிரத்து 689 பேர் மரணித்தனர்.
இதன்படி, அமெரிக்காவில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 9 இலட்சத்து 2 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளதென சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் 4 இலட்சத்து 97 ஆயிரத்து 351 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது.
4 கோடியே 56 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
2 கோடியே 81 இலட்சம் பேர் அமெரிக்காவில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.