கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.
விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
இது 2014 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் பதிவான மசகு எண்ணெய்யின் அதிகபட்ச மதிப்பாகும்.
அத்துடன் அமெரிக்காவின் டப்ளியுவ்.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.82 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
விநியோகத்தடை மற்றும் கேள்வி அதிகரிப்பு என்பன காரணமாக கடந்த வாரத்தில் மசகு எண்ணெய்யின், விலை 7 வருடத்தினைக் காட்டிலும் அதிகரித்திருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 6 வாரங்களாக மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.