மத்துகம கொலைச் சம்பவம்: பெண்ணொருவர் கைது!

202007031339286231 Tamil News perambalur near Tobacco products sales arrest SECVPF
202007031339286231 Tamil News perambalur near Tobacco products sales arrest SECVPF

மத்துகம பாலிகா வீதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர், நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி இரவு, மத்துகம பாலிகா வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இருவரினால், குறித்த பெண் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் 39 வயதான பெண் ஒருவர் நுகேகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.