பீகாரில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!

download 4
download 4

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மின்னல் தாக்கில் 20 பேர் பலியாகினர்.

இந்தநிலையில் குறித்த மாநிலத்தில் இன்றும் நாளையும் கடுமையான இடி, மின்னலுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடர்முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மக்களை கோரியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி நூற்றுக் கணக்கானோர் மரணிக்கின்றனர்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகளவான மக்கள் பொதுவெளிகளில் வேலை செய்வதே இதற்கான பிரதான காரணமாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் இந்தியா ரூபா இழப்பீடாக வழங்கப்படும் பீகார் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச கட்டடங்களில் மின்னல் தடுப்பு கருவிகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.