இந்தியா முழுவதும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான புள்ளி விபரத்தின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு ஒரு இலட்சத்து 8 ஆயிரம் பேர் தமிழகத்தில் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் உயர்வடைந்து வருவதாகவும், புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.