ஈரான் ஆதரவு பெற்ற முக்கிய தளபதி சுட்டுக்கொலை!

irak1
irak1

ஈரான் ஆதரவு பெற்ற ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற போராளிக் குழுவின் தளபதி தலேப் அப்பாஸ் அலி அல்-சைடி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பக்தாத்தில் தென்மேற்கே கர்பலா என்ற நகரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றைய நாள் (11) கொலை செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

ஈரான் ஆதரவுடைய ஷியைட் பி.எம்.எப் குழுவில் உள்ள ஒரு பிரிவான கர்பலா படைப்பிரிவின் தளபதியாக அல்-சைதி இருந்மை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு குறித்து மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய தலைமையகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஜனவரி 3ம் திகதி ஈராக்கில் அமெரிக்கா நடத்திய குண்டுத் தாக்குதலில் பி.எம்.எஃப் தலைவரான அபு மஹ்தி அல்-முஹாண்டிஸ் மற்றும் ஈரானிய ஜெனரல் குவாசின் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அல்-சைதி சுட்டு கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.