எழுக தமிழுக்கு ஆதரவாக கனடாவில் நடைபெற்ற பேரணி

ee05
ee05

தமிழர் தாயகத்தின் எழுச்சி நிகழ்வாக யாழ். முற்றவெளியில் இடம்பெற இருக்கின்ற எழுக தமிழுக்கு வலு சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் எழுகதமிழ் ஆதரவு பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் வரிசையில் கனடாவில் அமைந்து அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் கனேடிய தமிழர் அமைப்புகளின் ஆதரவுப் பேரணி இடம்பெற்றுள்ளது.

இப்பேரிணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எழுக தமிழாக பங்கெடுத்துள்ளது. மழைக்கும் மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்த இப்பேரணியில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்துள்ளனர்.

முன்னராக நியூசிலாந்திலும் எழுக தமிழுக்கு வலுச்சேர்க்கும் ஆதரவு பேரணி இடம்பெற்றுள்ளதோடு, தாயக எழுக தமிழுக்கு சமாந்திரமாக, அமெரிக்காவிலும், தமிழ் நாட்டிலும் எழுக தமிழ் இடம்பெற இருகின்றது.

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்றுவதற்கு எழுக தமிழ் ஒரு வாயிலாக அமைய வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.