அமெரிக்காவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியபோது, எரிபொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக 20 சிறுவர்கள் உட்பட 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
149 பயணிகளுடன் சீனாவின் ஷங்காய் நோக்கி புறப்பட்ட குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக, லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் விமானத்தின் எடையை குறைப்பதற்காக எரிபொருளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்போது குடெய் ஊரனயால பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை மைதானத்தில் எரிபொருள் வெளியேற்றப்பட்டமையினால், அங்கிருந்த 20 சிறுவர்கள் மற்றும் 11 பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோல் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.