உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் அனைவரையும் தண்டிப்போம் – ஈரான் அதிபர்

iran1
iran1

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது டன் தெடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரையும் தண்டிப்போம் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அறிவித்தார்.

இந்நிலையில் ஈரானிய அதிபர் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு பதிலளிக்கையில்,

“இந்த சம்பவத்தில் எந்தவொரு மட்டத்திலும், தவறுதலாக அல்லது அலட்சியமாக நடந்து கொண்ட எவரும் நீதியை எதிர்கொள்வது நமது மக்களுக்கு முக்கியமானது.

உயர் நீதிபதிகளையும், வல்லுனர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை நீதித்துறை அமைக்க வேண்டும்.

இதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு காரணமான ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.