கடும் தலைவலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட நிலையில் பல வருட காலமாக துன்பப்பட்டு வந்த நபரொருவரை தீவிர மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த நபரின் தலையில் நாடாப் புழு ஒன்று இருந்துள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தில் அஸ்டின் நகரில் வசிக்கும் கெரார்டோ என அழைக்கப்படும் குறித்த நபர் பல வருட காலத்திற்கு முன்னர் மெக்ஸிககோவில் வசித்து வந்துள்ளார்.
அங்கே முறையாக சமைக்காத பன்றி இறைச்சியை உண்டதையடுத்து அவருக்கு நாடாப் புழு தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அவரது மூளையிலிருந்த நாடாப் புழு அகற்றப்பட்டது.
அவர் சிகிச்சை பெறுவதற்கு இன்னும் தாமதமாகியிருக்கும் பட்சத்தில் அந்த நாடாப் புழுவும் அதிலிருந்து இனவிருத்தியடைந்த புழுக்களும் அவரது உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.