பாகிஸ்தானில் சிறுமி மலாலா மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த தலிபான் இயக்கத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளரான எசானுல்லா எசான் அந்நாட்டு சிறையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.
தப்பியோடிய குறித்த நபர் ஒளிப்பதிவு நாடாவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடவுளின் உதவியால் ஜனவரி 11 அன்று வெற்றிகரமாக நான் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருந்து தப்பித்து விட்டேன்.
2017 இல் நான் சரணடைந்த போது அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் படைகள் நிறைவேற்றவில்லை. அதனாலேயே சிறையில் இருந்து தப்பினேன் என அதில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தான் இருக்கும் இடத்தை அதில் வெளிப்படுத்தவில்லை. சிறையில் இருந்த தப்பி ஓடிய நிலையில், குறித்த நபர் ஒலிநாடாவை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே கருதப்படுகின்றது.