கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது நாளை நள்ளிரவு முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரை செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.