24 மணித்தியாலங்களில் 189 பேர் உயிரிழப்பு!

1 33
1 33

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இத்தாலியில் 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக இத்தாலியில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவிற்கு அடுத்ததாக கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில், நேற்று முன்தினம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,462 ஆக இருந்தது. நேற்று அது 15,113 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இத்தாலி கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.