இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளது.
35 ஆயிரத்து 713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர்.
லொம்பாடி பிராந்தியம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு ஒரேநாளில் 319 பேர் உயிரிழந்துள்ளனர்.