சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம்: சீனா திட்டவட்டம்

7 o
7 o

கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்பது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மடிந்து வருகினறனர். இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், இதை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.

இந்நிலையில், வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

மேலும், ஏற்கனவே இதைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் இருந்துதான் வைரஸ் பரவியுது என்று கண்டறியப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனும் சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்.

இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. மக்களிடம் பொய்களை சொல்லி தவறாக வழி நடத்துவது மிகவும் ஆபத்தானது. இது நோய் பரப்பும் வைரஸை விட மிக ஆபத்தானது’’ என்று கூறியுள்ளது.