மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

8 ooo
8 ooo

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

ஆரம்ப காலங்களில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக சராசரியாக ஒரு நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,102பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 95பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 155,370ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 1,451ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 134,054 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 19,865பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏனைய நாடுகளில் தற்போது குறைந்துவருகின்ற நிலையில், ரஷ்யாவில் விஸ்வரூபமெடுக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.