அமெரிக்காவில் நடைபெறும் கருப்பின மக்களின் நீதி கோரும் போராட்டத்திற்கு ட்ரம்ப்பின் மகள் தனது முழுமையான ஆதரவை தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் உயிரிழந்த கருப்பினத்தவருக்காக நடக்கும் போராட்டத்திற்கு, ட்ரம்ப்பின் மகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதை விட ட்ரம்பிற்கு வேறு அசிங்கம் தேவையில்லை என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜோர்ஜ் பிளொய்ட் என்பவர் வெள்ளை இன பொலிஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த 25ஆம் திகதி கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி ட்ரம்ப், நேரத்தை வீணடிக்காதீர்கள். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று கூறினார். ட்ரம்பின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ட்ரம்ப் ஒரு புறம் இப்படி பேசிக் கொண்டிருக்க, ட்ரம்பின் 2வது மனைவியான மார்லா மேப்பிள்ஸின் மகள் டிப்பனி (26) இந்த போராட்டத்துக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தந்துள்ளார்.
கலவரத்தையும், கொள்ளையையும் நிறுத்த நான் இராணுவத்தை இறக்க போகிறேன், ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், அவரது மகள் இதை எல்லாம் உதாசீனப்படுத்தி உள்ளார்.
சமூகவலைத்தளங்களில் ஜோர்ஜ் பிளொய்ட் மரணத்திற்கு ஆதரவாக #blackoutTTuesday # #justiceforgeorgefloyd என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்டை ஆதரிப்பதற்காக ஒரு கருப்பு நிற போட்டோவை ஷேர் செய்து வந்துள்ளனர். இந்த கருப்பு படத்தைதான் இன்ஸ்டாகிராம், மற்றும் டுவிட்டரில் டிப்பனி பதிவிட்டுள்ளார்.