ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி விடுத்துள்ள எச்சரிக்கை!

download 8
download 8

உலகில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், விமானத்துறையை மீண்டும் தொடங்க முடியாவிட்டால் பிரித்தானியாவில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கலாம் என்று லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி எச்சரித்துள்ளார்.

இது குறித்து பிரித்தானியாவில் தற்போது சில புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் பொது மக்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

மேலும் இதற்கிடையில், பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு (14) நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந் நடவடிக்கை உள்நாட்டு சுற்றுலாவை அழிக்கும் மற்றும் ஏற்றுமதியை சேதப்படுத்தும் என்று மிகப்பெரிய விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான பிரித்தானியா அரசாங்கம் பிடிவாதமாக அமுல்படுத்தியிருக்கிறது.