வெள்ளப்பெருக்கில் சிக்கிய சீனா- இடம்பெயரும் மக்கள்!

 வெ1
வெ1

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை (12) பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளளனர். அத்துடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் கடந்த (2) ஆம் திகதி முதல் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் (2) இலட்ச்சத்து (28) ஆயிரம் பேர் அவசரகால தங்குமிடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் என்று நாட்டின் அவசரகால முகாமைத்துவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் சீனாவின் யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்ளிட்ட மாகாணங்களில் பெரும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள (8) மாகாணங்களில் உள்ள (110) ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுமார் (10) ஆயிரத்து (700) ஹெக்டேர் பரப்புள்ள பயிர்ச்செய்கைகள் நாசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீனாவின் குவாங்சியின் தெற்கு பிராந்தியத்தில் பாரிய வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார், மேலும் வடக்கே ஹுனான் மாகாணத்தில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால வெள்ளப்பெருக்கு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சீனாவின் முக்கிய நதி அமைப்புகளின் கீழ் பகுதிகளில், குறிப்பாக யாங்சி மற்றும் தெற்கே பேர்ல் போன்றவற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

சீனாவில் மிக மோசமான வெள்ளம் (1998) இல் ஏற்பட்டது, அதில் (2,000) க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட (3) மில்லியன் வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.