சீன அதிபரின் இந்திய விஜயம், தமிழகத்தில் உற்சாக வரவேற்பு

mahabalipuram
mahabalipuram

நாளை 11 ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்திய பிரதமர் மோடியுடன் வரலாற்று சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை மாலை மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாமல்லபுரத்திற்கு நேரில் சென்று சீன அதிபர் வருகைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்திள்ளார். அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் சீன அதிபர் மற்றும் நமது பிரதமரிடையேயான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தமிழகமே உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.