இந்திய சீன எல்லையில் மீண்டும் மோதல்!

2@@சூசூ@
2@@சூசூ@

நேற்று(15) இரவு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீன ஆகிய இரு படையினருக்கும் இடையே மீண்டும் மோதல் எற்பட்டுள்ளது. இதில், இந்திய ராணுவத்தில் அதிகாரி ஒருவரும் 2 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனப் படைகள் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மீண்டும் மோதல் வெடித்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.