விமானப் பயணிகளுக்கு மதுபானம் வழங்குவதை பல்வேறு விமான நிறுவனங்கள் நிறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ், விமான போக்குவரத்து தொழிலை கடுமையாக முடக்கியது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடைமுறைகளுடன் விமானங்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.
ஐரோப்பாவில் ஈசிஜெட், கேஎல்எம், அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஆசியாவின் விர்ஜின் அவுஸ்திரேலியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கையாகவும், பயணிகளுக்கு மதுபானம் வழங்குவதை நிறுத்தி உள்ளன.
உலகம் முழுவதிலும் இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.