உலகில் கடந்த (50) ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து ஏற்படவுள்ள இந்த உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முதல் நடவடிக்கையாக வறிய மக்களிடையே சிறந்த சமூக பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியமாகும்.
இல்லாவிட்டால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை போஷாக்கு கிடைக்காமல் போய் விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகிறார்.