காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுட்டுக்கொலை செய்ய தீர்மானம்: இந்தியா

தெற்கு காஷ்மீரில் சிறப்பு பயிற்சி பெற்ற தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், குறித்த தீவிரவாதிகள் அனைவரையும் சுட்டுக்கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் டிரால் மற்றும் குரூவ் பகுதியில் பதுங்கியிருக்கும் குறித்த தீவிரவாதிகள் போதிய அனுவம் பெற்றுள்ளவர்கள் என்பதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துகட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினரை அழித்ததால் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் விஜயகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.