பிரேமதாசா புலிகளுக்கு கொடுத்த ஆயுதங்களை நானே எடுத்து வந்தேன்!- கருணா

karuna amman 1
karuna amman 1

எனக்கு இனவாதம் பேசுவதற்கு விருப்பமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இனவாதம் பேசுகின்றனர். நான் யார் என்பதனை சிங்கள மக்கள் அறிவார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசவே எனக்கு எதிராக செயற்படுகின்றார். அவரே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார். எனக்கு எதிராக மக்களின் மனங்களில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி தற்போதைய அரசாங்கத்திற்கான பௌத்த வாக்குகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கமே சஜித் பிரேமதாசவுக்கு இருக்கின்றது.

ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்திலேயே புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அன்ரன் பாலசிங்கத்துடனான சமாதானப் பேச்சு காலத்தில் இது நடந்தது. ஆயுதங்கள், பணங்கள் வழங்கப்பட்டன. நானே அவற்றை எடுத்து வந்தேன்.

விடுதலைப் புலிகள் ஒரு பக்கத்தில் நிலத்திற்காகவே போராட்டம் நடத்தினர். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் அப்படியானது அல்ல. ஞானசார தேரர் போன்றோர் இது தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நான் வரவேற்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.