கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கனடாவில் மூன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ரொறன்ரோவைச்சேர்ந்த பற்குணலிங்கம் ராசலிங்கம்(வயது 48 ) என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த நபர் கடந்த 2020 ஜூன் 15 திங்கள் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை, ஸ்கார்பாரோவில் உள்ள நீல்சன் சாலை மற்றும் மெக்லெவின் அவென்யூ பகுதியில் நடந்த முந்தைய பாலியல் குற்றங்கள் குறித்து பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2003 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், குறித்த நபர் மூன்று வெவ்வேறு சிறுவர்களை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை, பாலியல் குறுக்கீடு மற்றும் பாலியல் தொடுதலுக்கான அழைப்பு ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இருக்கலாம் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதான நபர் எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வியாழக்கிழமை அன்ரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.