ஜம்மு காஷ்மீரில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோபியான் மாவட்டத்தின் அம்ஷிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்று அதிகாலை பாதுகாப்புப்படைகள் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
இதன்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து பதிலுக்கு வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதேவேளை, குல்காம் மாவட்டத்தில் இதேபோன்று நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய கொமாண்டர் உட்பட 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த இரு சண்டைகளிலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் அமர் யாத்திரையை சீர்குலைக்க பயங்கவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் குறித்த பகுதிகளில் படைகள் குவிக்கப்பட்டு மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என சோதனை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது