இந்தியாவின் உத்தரப் பிராந்திய(லக்னோ) பிரதேசத்தின் 4 வலயங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பிராந்தியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஒரு வார காலம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம்(19) இந்தியாவில் 40 ஆயிரம் பேர் வரையிலான புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்கள் பதினொரு இலட்சத்து 18 ஆயிரம் பேராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளது.