ஹெலிகாப்டரில் இருந்து சென்று டாங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை

Dhruvastra
Dhruvastra

ஒடிசா பாலசோரில் ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

துருவஸ்ட்ரா என்ற ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒடிசா பாலசோரில் சோதனை செய்யப்பட்டது. ஹெலிகாப்டரில் சுமந்து சென்று சோதனை நடத்தபடவில்லை.

தரையில் இருந்து சோதனை நடத்தப்பட்டடு. இந்த சோதனை கடந்த 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிரி நாடுகளின் டாங்கிகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.