வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிக்கரடிகள் அழிவடையக் கூடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தவறினால், குறித்த மோசமான நிலையை எதிர்நோக்க நேரிடுமெனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆர்ட்டிக் கடலிலுள்ள பனிப்பாறைகள் உருகி வருவதனால், அதிகளவான விலங்கினங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.